இந்தியாவில் 8 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு – 4 பேர் பலி! சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!

0
இந்தியாவில் 8 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 4 பேர் பலி! சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!
இந்தியாவில் 8 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 4 பேர் பலி! சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!
இந்தியாவில் 8 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு – 4 பேர் பலி! சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவளினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கொரோனா பரவல்

இந்தியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசும் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது அவசியம் இல்லாமல் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும், பொது இடங்களில் செல்லும் போது மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. அவ்வப்போது கொரோனா பரவல் குறைய குறைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்க துவங்கியுள்ளது.

மத்திய அரசின் குடும்ப ஓய்வூதியம் பெறும் நபர்கள் கவனத்திற்கு – புதிய அறிவிப்பு வெளியீடு!

இந்தியாவில் மட்டுமே கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது மற்றும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டுமே இந்தியாவில் 8 ஆயிரத்து 582 பேர் புதிதாக கொரோனா பரவளினால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 4 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரண்டு தவணையாக தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வந்தது. இந்தியாவில் மட்டுமே தற்போது வரைக்கும் 195 கோடி மக்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளனர் . ஆரம்பத்தில் முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. பின்பு அனைத்து பொது மக்களுக்கும் 18 வயது பூர்த்தி அடைந்து விட்டாலே தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் 65 வயது பூர்த்தி அடைந்த அவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவுவதை கருத்தில் கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் செலுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!