நாடு முழுவதும் ஒரே நாளில் 37,566 பேருக்கு கொரோனா – 907 பேர் பலி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37,566 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 2 மாதங்கள் கழித்து முதல் முறையாக இறப்பு எண்ணிக்கையானது ஆயிரத்துக்கும் கீழாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
கொரோனா 2 ஆம் அலை தாக்கமானது நாடு முழுவதும் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்தியா முழுவதுமாக தீவிரமடைந்து வந்த கொரோனா பரவல் காரணமாக பெருமளவு பாதிப்புகளை சந்திக்க நேர்ந்தது. முன்னதாக 139 கோடி மக்கள் தொகையை கொண்ட நம் நாடு கொரோனா முதலாம் அலையால் ஏற்பட்ட தாக்கத்தை சீராக கட்டுப்படுத்தியது. ஆனால் எதிர்பாராத விதமாக உருவெடுத்த கொரோனா 2 ஆம் அலையால் ஒரு நாளைக்கு மட்டும் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். பலி எண்ணிக்கையும் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் வீதம் அதிகரித்து வந்தது.
ஜூலை 1 முதல் 8 மாவட்டங்களில் மதுபான கடைகள் திறக்க அனுமதி – ஊரடங்கு தளர்வுகள்!
இதற்கிடையில் தான் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளாக மாநிலங்கள் தோறும் தடுப்பூசி போடும் பணிகளும், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தீவிரமடைந்தது. அந்த கட்டுப்பாடுகள் நிமித்தமாக இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை பாதிப்பு வெகுவாக குறைந்து வந்து, தற்போது ஒரு நாளைக்கு 40 ஆயிரத்துக்கும் கீழாக புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்படுகிறது. அந்த அடிப்படையில் இந்தியாவில் நேற்று (ஜூன் 28) ஒரு நாள் மட்டும் 37,566 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,03,16,897 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு இறப்பு எண்ணிக்கை 4 ஆயிரமாக பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 907 இறப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மொத்த பலி எண்ணிக்கை 3,97,637 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 2,93,66,601 பேர் குணமடைந்துள்ளனர். தவிர நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 5,52,659 பேர் சிகிச்சையில் உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.