50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – 1,183 பேர் உயிரிழப்பு!
நாடு முழுவதும் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள் விவரங்கள் குறித்து அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் கொரோனாவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பலர் தங்களது சொந்தங்களை இழந்துள்ளனர். இந்நிலையில் மாநில அரசு துரிதமாக செயல்பட்டு கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கிய நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
கர்ப்பிணி பெண்களுக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!
நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 48,698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,01,83,143 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 1,183 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,94,493 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 64,818 பேர் குணமடைந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,91,93,085 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5,95,565 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 31,50,45,926 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.