கர்ப்பிணி பெண்களுக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!
இந்தியாவில் செலுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளை இனி கர்ப்பிணி பெண்களும் எடுத்துக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்து, அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் கொரோனா அவசர கால பயன்பாட்டில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் பல கட்ட ஆய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தற்போது பொது மக்களுக்கு செலுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த இரு தடுப்பூசிகளும் முதல்கட்டமாக கொரோனா முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் ஆகியோருக்கு போடப்பட்டது. பின்பாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மூன்று கட்டமாக இப்பணிகள் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு வழங்கும் ரூ.4000 உதவித்தொகை – ஜூன் 30 கடைசி நாள்!
இதற்கிடையில் கர்ப்பிணி தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக நாடு முழுவதும் தற்போதுள்ள கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் பொது மக்களுக்கான தடுப்பூசி போடுவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
அப்போது தடுப்பூசிகள் குறித்து பேசிய ICMR இயக்குனர் டாக்டர் பலராம் பார்கவா, ‘கர்ப்பிணிப்பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி இனி கர்ப்பிணிகளும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இந்தியாவில் தற்போது குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிகள் குறித்த பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் பரிசோதனை முடிவுகள் வெளியாகும்’ என தெரிவித்தார். நாடு முழுவதும் இதுவரை 25.37 கோடி பேருக்கு முதல் டோஸ் மற்றும் 5.42 கோடி பேருக்கு 2 ஆவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.