அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஷாக் கொடுத்த காவலர்கள் – நடந்துள்ள ருசிகர சம்பவம்!
பெங்களூரு நகரில் அதிக அளவிலான ஆட்டோக்களில் பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகார்களை அடுத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளனர்.
கூடுதல் கட்டணம்:
தென் மாநிலங்களில் முன்னோடியாக மீட்டர் முறையில் ஆட்டோ கட்டணத்தை பின்பற்றி வந்த பெங்களூரு நகரில் கூடுதலாக ஆட்டோ கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வந்தது. இதனால் ஆட்டோ கட்டணத்தை அரசு தலையிட்டு முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வந்தது. இதனால் கர்நாடகா அரசு ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தியும், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சில விதிமுறைகளை விதித்தும் உத்தரவிட்டனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், தீபாவளி தினமான நேற்று பெங்களூரு நகரில் காவலர்கள் சீருடை அணியாமல் சாதாரண மக்களை போன்று ஆட்டோக்களில் பயணித்தனர். அப்போது ஆட்டோ ஓட்டுனர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று கூடுதல் கட்டணம் வசூலித்த 1000க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு.. அதிகரிக்கும் தட்டுப்பாடு – பொதுமக்கள் அதிர்ச்சி!
Exams Daily Mobile App Download
இதைத்தவிர ஓலா போன்ற வாடகை ஆட்டோ பதிவு முறையிலும் அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டத்தை தொடர்ந்து ஓலா நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்களை தடை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பதிலாக அரசு நிர்வாகத்தின் கீழ் வாடகை ஆட்டோக்களுக்கான செயலி உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.