தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் – 100 வழக்குகள் பதிவு!!
தமிழக தனியார் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மற்ற மாணவிகள் புகார் அளிக்கலாம் என கூறப்பட்டதை தொடர்ந்து 100 ஆசிரியர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் புகார்:
கொரோனா காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆன்லைன் வகுப்புகளின் போது தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவி ஒருவரிடம் தவறான நோக்கத்தில் ஈடுபட்டதாக கூறி, அவர் மீது புகார்கள் எழுந்தது. இதை தொடர்ந்து குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தமிழக பள்ளி ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்பின் போது, மாணவிகளிடம் தவறான நோக்கில் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என தமிழக அரசு எச்சரித்தது.
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட அறிக்கைகள் – உச்ச நீதிமன்றம் ஆணை!!
தமிழகம் முழுவதும் இந்த விதமான பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் அம்மாணவிகள் புகார் அளிக்கும் வகையில் தொலைபேசி எண் – 94447 72222 அறிமுகப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இந்த எண்ணின் மூலம் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை அளித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மூலமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட மாணவிகள் 100 பேர் புகார்களை அளித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
குறிப்பாக சென்னையில் மட்டும் 22 மாணவிகள், ஆசிரியர்கள் மீது புகார்களை அளித்துள்ளனர். இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் புகார் அளிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மகளிர் போலீசார், குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். தவிர வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள புகார்களை அந்தந்த காவல்துறை ஆணையர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.