செப்.1 முதல் கல்லூரி வகுப்புகள் தொடக்கம் – ஏஐசிடிஇ அறிவிப்பு!
புதிய கல்வியாண்டு தொடங்கிய நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கப்படும் என்று ஏஐசிடிஇ புதிய கல்வி ஆண்டுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
ஏஐசிடிஇ அறிவிப்பு:
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக கல்வி நிறுவனங்கள் நீண்ட நாட்களாக மூடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களுக்கு பெரும்பாலும் ஆன்லைன் வழியில் வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது புதிய கல்வி ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இதை அடுத்து ஏஐசிடிஇ புதிய கல்வி ஆண்டுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், முதுகலை மேலாண்மை நிறுவனங்கள், தொலைதூர கல்வி மற்றும் ஆன்லைன் படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் வருகிற ஜூன் 30ம் தேதிக்குள் அங்கீகாரம் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் SBI வங்கி ATM களில் பணம் எடுக்க தடை – மோசடி எதிரொலி!
அதேபோல் பல்கலை/கல்வி வாரியங்கள் கல்லூரிகளுக்கான இணைப்பை வழங்க ஜூலை 15 கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-22 ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு வருகிற ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவு பெறும் என்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் அனைத்தும் வருகிற செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும் ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. அதேபோல் முதுகலை மேலாண்மை நிறுவனங்கள் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் வகுப்புகளை தொடங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களை முழு கல்வி கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் மாணவர்களிடம் கட்டணத்தை 4 தவணைகளில் வசூலிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா கால கட்டத்தில் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை எக்காரணம் கொண்டும் பணியில் இருந்து நீக்க கூடாது என்றும் அவ்வாறு நீக்கப்பட்டிருந்தால் அதற்கான உத்தரவை கல்லூரிகள் திரும்ப பெற வேண்டும் என்றும் உரிய நேரத்தில் பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Super
Ok sir super