தமிழகத்தில் கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி – ஆவணங்கள் சேகரிப்பு பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை நகை கடன் பெற்றவர்களின் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து விரைவில் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகைக்கடன் தள்ளுபடி:
திமுக தேர்தல் அறிக்கையில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் வரை 5 சவரன் நகைக்கடன் பெற்றுள்ளவர்கள் விவரங்களை உடனே அனுப்ப வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் சுற்றறிக்கை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்திய பாதுகாப்பு படை பிரிவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு ரத்து – மத்திய அரசு!
அவ்வாறு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டதாவது, கூட்டுறவு சங்கங்களில் கடந்த மார்ச், ஏப்ரல் வரை நிலுவையில் இருந்த கடன் தொகை விவரங்கள் மற்றும் 5 சவரன் நகைக்கடன் நிலுவை விவரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும். நகைக்கடன் வழங்கியதற்கான நிதி ஆதாரங்கள், பயனாளிகளின் விவரங்களையும் மாவட்ட வாரியாக வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மண்டல இணைப் பதிவாளர்கள் கையொப்பமிட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு மின்னஞ்சலிலும், தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். ஒரே நபர் வெவ்வேறு சங்கங்களில் நகைக்கடன் பெற்றிருந்தால், அவர்களின் ஆதார் எண், ரேஷன் கார்டு விபரங்கள் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ரஞ்சி டிராபி போட்டிகளுக்கான அட்டவணை மாற்றம் – பிசிசிஐ அறிவிப்பு
அதனை தொடர்ந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 5 சவரன் நகைக்கடன் நிலுவை விவரங்கள், 5 சவரனுக்கு மேல் பெற்றுள்ள கடன் நிலுவை விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. 5 சவரன் நகை மற்றும் அதற்கு மேல் வைத்துள்ள நகைக்கடன் விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு, நகைக்கடன் தள்ளுபடி வழங்குவதற்காக ரேஷன் கார்டு, ஆதார் எண், பான் கார்டு ஆகியவை சேகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.