12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – மாநில அரசு அறிவிப்பு!
தெலுங்கானா மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அம்மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்களின் விவரம் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தேர்வுகள் ரத்து:
கொரோனா பரவல் காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை அரசு ஒத்திவைத்தது. இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வதாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர அம்மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கும் முறை குறித்து, தெலுங்கானா மாநில இடைநிலைக் கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைதளமான tsbie.cgg.gov.in இல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக வாகன சோதனை குறைப்பு – காவல்துறை அதிகாரிகள் விளக்கம்!!
அந்த வகையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்களின் உள் மதிப்பீட்டு மதிப்பெண்களின் படி இறுதி தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் வழங்கப்படும். அந்த முடிவுகளில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு கொரோனா நிலை கட்டுக்குள் வந்த பிறகு தேர்வுகள் நடத்தப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக தெலுங்கானாவில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை முன்வைத்து வந்தனர்.
TN Job “FB Group” Join Now
மேலும் மாநில இடைநிலை தேர்வுகளை நடத்துவது குறித்த இறுதி முடிவை எடுக்குமாறும் அரசுக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதை தொடர்ந்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வுகளை ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக அம்மாநிலத்தில் சுமார் 4.8 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எழுதுவதற்காக பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.