தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக வாகன சோதனை குறைப்பு – காவல்துறை அதிகாரிகள் விளக்கம்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வாகன சோதனை செய்வதை காவல்துறையினர் குறைத்துள்ளனர். மாலை 6 மணிக்கு மேல் வாகன சோதனைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மே 7 ஆம் தேதி வரை தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் கொரோனா பரவல் குறைவு காரணமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு ஜூன் 14 வரை கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அத்தியாவசிய தேவை கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) இழப்பு – விரிவான விளக்கம்!
இதனால் காவல்துறையினர் வாகன சோதனையை குறைத்துள்ளனர். மாலை 6 மணிக்கு மேல் வாகன சோதனைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இ-பதிவு இல்லாமல் பயணம் செய்யும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கு முடியும் வரை தேவையில்லாமல் வெளியே சுற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
கடந்த 60 நாட்களில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையான முகக்கவசம் அணியாமல் இருந்தவர்கள் மீது 13 லட்சத்து 14 ஆயிரத்து 563 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது 69 ஆயிரத்து 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.