தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு ரத்து!
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு மூலமாக பாடப் பிரிவுகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்து உள்ளார்.
நுழைவுத்தேர்வு ரத்து:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது உள்ள சூழ்நிலையில் தேர்வுகள் நடத்தப்பட்டால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சீன வனப்பகுதியில் ஆழ்ந்த உறக்கத்தில் 16 ஆசிய யானைகள் புகைப்படம் – இணையத்தில் வைரல்!
இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2021-22ம் கல்வி ஆண்டில் ஜூன் மாதம் 3 ஆம் வாரம் வகுப்புகள் தொடங்கப்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு மதிப்பெண் இல்லாமல் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதில் மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் வரும் பிரிவுகளில் முந்தைய வகுப்புகளில் மாணவர்கள் படித்த அப்பிரிவை சேர்ந்த பாடங்களில் இருந்து 50 வினாக்கள் எடுத்து நுழைவுத்தேர்வு நடத்தி அதன் மூலமாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழக அரசு இன்று 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்த நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நுழைவுத்தேர்விற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.