தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கீடு – அரசுக்கு எதிர்ப்பு!
கொரோனா பரவல் எதிரொலியாக ரத்து செய்யப்பட்டுள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கும் முறை குறித்து தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. இந்த சூழலில் மாணவர்களுக்கான மதிப்பீடுகள் வழங்கும் முறை குறித்து பாமக நிறுவனர் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மதிப்பெண்கள் கணக்கீடு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அம்மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்களை வழங்குவது தொடர்பாக, கடந்த 4 மாதங்களாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது இந்த கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் மிக குறைந்த நாட்களே பள்ளிக்கு சென்றிருப்பதாலும், அவர்களுக்கு செய்முறை, பருவத்தேர்வுகள் முறையாக நடத்தப்படாததாலும், மதிப்பெண்கள் வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுகிறது.
INI CET நுழைவுத்தேர்வு 2021 ஒத்திவைப்பு – உச்ச நீதிமன்றம் பரிந்துரை!
அந்த வகையில் மாணவர்களின் 9 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் 10 ஆம் வகுப்பிற்கு மதிப்பெண்கள் வழங்குவது மற்றும் கிரேடு முறையில் இறுதி தேர்வு சான்றிதழ் வழங்குவது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் நடப்பாண்டில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு,கடந்த ஆண்டும் தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டது. இதனால் மதிப்பீடுகள் குறித்த குழப்பங்களும், சிக்கல்களும் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் இல்லாமல் தேர்ச்சி சான்றிதழ் மட்டும் வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சான்றிதழில் மாணவர் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும் தவிர மதிப்பெண்கள் இருக்காது. தமிழக அரசின் இந்த மதிப்பீடுகள் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், ‘தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண்களை வழங்காமல், கிரேடு மட்டும் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இவை உண்மை என்றால் அரசு எடுத்துள்ள முடிவு தவறானதாகும். மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடப்படவில்லை என்றால், பத்தாம் வகுப்பை கல்வி தகுதியாக கொண்டு அரசு பணிகளுக்கு செல்வதில் மாணவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படும். அது மாணவர்களின் கல்வி திறனை பாதிக்கும். கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏறத்தாழ 3 அல்லது 4 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழை வழங்க அரசு ஆலோசிக்க வேண்டும்’ என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Fshkczvkk