INI CET நுழைவுத்தேர்வு 2021 ஒத்திவைப்பு – உச்ச நீதிமன்றம் பரிந்துரை!
மத்திய அரசின் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்படும் தனி நுழைவுத் தேர்வான இனி – செட் தேர்வை குறைந்தது ஒரு மாதமாவது ஒத்திவைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இனி- செட் தேர்வு:
மத்திய அரசால் நடத்தப்படும் எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர், பெங்களூரு நிம்ஹான்ஸ், சண்டிகர் பிஜிஐஎம்இஆர் உள்ளிட்ட 11 கல்லூரிகளில் முதுகலை மருத்துவப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க 2021 ஆம் ஆண்டு முதல் தனி நுழைவுத் தேர்வு (இனி- செட்) நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த தேர்வு நவம்பர் 30 ஆம் தேதி கணினி மூலமாக 121 நகரங்களில் நடத்தப்பட்டது.
‘கோதுமை மாவு முதல் குளியல் சோப் வரை’ – தமிழக அரசு வழங்கவுள்ள 14 பொருட்கள்!
இந்த தேர்வானது முதுகலை மருத்துவ படிப்புகளான எம்.எஸ்., எம்டி., எம்.எச்., டி.எம்., எம்.சிஎச்., எம்.டி.எஸ் ஆகிய படிப்புகளுக்காக நடத்தப்படுகிறது. நீட் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துவது போல, இந்த தேர்வை எய்ம்ஸ் நடத்துகிறது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தேர்வு குறித்த அறிவிப்பை எய்ம்ஸ் மே 27 தேதி அறிவிப்பு வெளியிட்டது.
TN Job “FB Group” Join Now
ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம், மருத்துவ மாணவர் வலையமைப்பு ஆகியவை மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், குறைந்தது ஒரு மாதமாவது இனிசெட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.