ரூ.59,000 விலையில் கொரோனா ஆன்டிபாடி கலவை மருந்து – சிப்ளா நிறுவனம் அறிமுகம்!!
நாடு முழுவதும் பல தாக்கங்களை ஏற்படுத்தி வரும் கொரோனா நோய்க்கான ஆன்டிபாடி கலவை மருந்து ராச் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மருந்தை ரூ.59,000 விலையில் இந்தியாவில் சிப்ளா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
ஆன்டிபாடி கலவை மருந்து:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனாவை தடுக்க மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையின் மற்றொரு நகல் பதிவிறக்கம் – எளிய வழிமுறைகள் இதோ!!
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பல சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி தற்போது கொரோனா வைரஸூக்கு எதிராக செயல்படும் ஆண்டிபாடிகளின் கலவை இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இந்த மருந்தை ராச் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியாவில் சிப்ளா நிறுவனம் இதனை அறிமுகப்படுத்த உள்ளது.
TN Job “FB Group” Join Now
Casirivimab 600 மிலி கிராம், Imdevimab 600 மிலி கிராம் அடங்கிய 1200 மிலி கிராம் கொண்ட ஒரு டோஸின் விலை அனைத்து வரிகள் உட்பட ரூ.59,750 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை 12 வயதுக்கு மேற்பட்டவர் 40 கிலோவுக்கு மேல் எடை உள்ளவர்களுக்கு கொடுக்கலாம் என கூறப்பட்டு உள்ளது.