விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து ரூ.12 லட்சத்துடன் வெளியேறிய சிபி – ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் அடுத்த வாரம் இறுதி சுற்று நடைபெற இருக்கும் நிலையில் தற்போது ரொக்கப்பரிசுடன் வெளியேறும் போட்டியாளர் யார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 94 நாட்கள் முடிவடைந்துள்ளது. இந்த வாரம் இன்னும் 2 நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில் போட்டியாளர்களில் யார் இறுதி சுற்றில் இருப்பார்கள் என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். நேற்றைய எபிசோடில் நடிகர் சரத் குமார் வந்து 3 லட்சம் பண பெட்டியை கொடுத்தார். போட்டியாளர்கள் இந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே சென்றால் அது தோல்வி இல்லை என மனதை மாற்றுவது போல பேசினார். ஆனால் போட்டியாளர்கள் யாரும் அந்த பணத்தை எடுக்கவில்லை.
மனைவியை விவாகரத்து செய்யும் ‘பிக் பாஸ்’ அபிநய்? வெளியான தகவல்! ரசிகர்கள் ஷாக்!
அடுத்த நாள் அந்த பணம் அதிகரித்து 6 லட்சம் ஆக்கப்பட்டது. ஆனால் அதையும் போட்டியாளர்கள் எடுக்கவில்லை. பின் 9 லட்சம் வரை கொண்டு செல்லப்பட்டது. இடையே லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் வீட்டில் இருக்கும் உப்பு, சர்க்கரை, வெங்காயம் ஆகியவை இல்லாமல் இருக்க வேண்டும். முதலில் போட்டியாளர்கள் அனைவரும் முடியாது என சொல்ல பின் சம்மதிக்கின்றனர். அதே போல சாணியை உடம்பில் ஊற்றிக் கொள்ள வேண்டும் என பிக்பாஸ் டாஸ்க் கொடுக்க, அதையும் செய்கின்றனர்.
‘பிக் பாஸ்’ வீட்டிலிருந்து ரூ.11 லட்சம் பணத்துடன் வெளியேறிய அமீர் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
இரண்டு நாட்களாக பணத்துடன் எந்த போட்டியாளர் வெளியேறுவார் என தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். ஆனால் தற்போது அது குறித்த உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. அதில் ரூ.12 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு சிபி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். அதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றன. மேலும் இன்றைய எபிசோடில் இது குறித்து காட்டப்படும். அதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் 6 போட்டியாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டு 5 பேர் இறுதி சுற்றில் அந்த பிரம்மாண்ட மேடையில் வர இருக்கின்றனர்.