தமிழகத்தில் 22 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை – கொரோனா தடுப்பு பணி!
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து கொண்டு வந்தாலும் மீண்டும் கொரோனா பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேம்படுத்துதல் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்தும் 22 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதல்வர் ஆலோசனை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பல மக்கள் பொருளாதார ரீதியாகவும், உடல்நிலை ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக ஜூன் 30 வரை 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும், மற்ற 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூலை 1 வரை நீட்டிப்பு – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
இந்நிலையில் இதன் காரணமாக தற்போது கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 12 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகள் அமல்படுத்துவது குறித்தும், மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்கவும், மாவட்டங்களின் வளர்ச்சி குறித்தும் முதல்வர் ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதில் 27 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்ட நிலையில் 22 ஆட்சியர்கள் ஆலோசனையில் பங்கேற்றனர். 16 மாவட்ட ஆட்சியர்களில் இரண்டு புதிய ஆட்சியர் உள்ளிட்டோர் காணொளி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முதல்முறையாக நியமிக்கப்பட்டுள்ள 22 ஆட்சியர்கள் முதல்வரின் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.