தமிழகத்தில் ஜூலை 1 வரை நீட்டிப்பு – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. இதன் விளைவாக ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதால் சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ள தெற்கு ரயில்வே அதனை ஜூலை 1 வரை நீட்டித்துள்ளது.
சிறப்பு ரயில்கள்:
தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனா அச்சம் காரணமாக சாதாரண பயணிகள் ரயில்கள் இன்றி, சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ரயில்வே துறை கடும் நிதிச்சுமைக்கு உள்ளாகி வருகிறது. இருந்தும் மக்கள் பாதுகாப்பு நலன் கருதி சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பரவி வருவதால் கடந்த மே 10ம் தேதி முதல்முறையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.
வாட்ஸ் அப் (Whats App) பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – புதிய அம்சங்கள் அறிமுகம்!
ஆனால் ரயில் போக்குவரத்திற்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பயணிகள் முறையான இ-பதிவுடன் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பொது முடக்கம் காரணமாக ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக காணப்பட்டு வருகிறது. தற்போது இதன் காரணமாக தமிழகத்தில் இயங்கி வரும் 25 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்து தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்தது.
TN Job “FB Group” Join Now
தற்போது அந்த வகையில் சென்னை சென்ட்ரல் – ஐதராபாத் சிறப்பு ரயில் நாளை (ஜூன் 16) முதல் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் – ஈரோடு சிறப்பு ரயில்கள் ஜூன் 17 முதல் ஜூலை 1ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் நாகர்கோவில் – கோயம்புத்தூர் சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் ஜூலை 1ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்து தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.