தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!!

0
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!!
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த நான்கு நாட்களுக்கு வானிலை நிலவரம் குறித்த தகவலையும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்:

இன்று (ஏப்ரல் 1) முதல் வருகிற 04.04.2021 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். மேலும் வருகிற 05.04.2021 அன்று தமிழகத்தில் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக தெளிவாக காணப்படும்.

தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். 01.04.2021 முதல் வருகிற 04.04.2021 வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 முதல் 6 டிகிரி செயல்சியஸ் அதிகரிக்க கூடும். மேலும் வருகிற 05.04.2021 முதல் 07.04.2021 வரை கரூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் உயரக்கூடும்.

TN Job “FB  Group” Join Now

இதன் எதிரொலியாக ஒரு சில பகுதிகளில் அனல் காற்று வீசக்கூடும். எனவே அன்று மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள், வேட்பாளர்கள், விவசாயிகள், காவலர்கள் உள்ளிட்டவர்கள் திறந்த வெளியில் வேலை செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வருகிற 05.04.2021 முதல் 07.04.2021 வரை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 3 முதல் 4 டிகிரி செயல்சியஸ் வரை உயரக்கூடும்.

தமிழகத்தில் தேர்தலுக்கு பின்பு பொதுமுடக்கம் – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எந்த பகுதியிலும் மழை பதிவாகவில்லை. மேலும் தற்போது அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறவுள்ளது. இதன் எதிரொலியாக இன்று மற்றும் நாளை அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்றும், மேற்கு வங்கக்கடலை ஒட்டிய தெற்கு ஆந்திர கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். எனவே அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், ஆந்திர கடல் பகுதிக்கு மீனவர்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!