சென்னை ஒருங்கிணைந்த சேவை மைய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.30,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஒருங்கிணைந்த சேவை மையம் சென்னையில் காலியாக உள்ள மைய நிர்வாகி, வழக்கு அலுவலர்கள், பாதுகாப்பாளர் மற்றும் பன்முக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து 27.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | ஒருங்கிணைந்த சேவை மையம் சென்னை |
பணியின் பெயர் | மைய நிர்வாகி, வழக்கு அலுவலர்கள், பாதுகாப்பாளர் மற்றும் பன்முக உதவியாளர் |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.10.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Chennai OSC காலிப்பணியிடங்கள்:
- மைய நிர்வாகி – 01 பணியிடம்
- வழக்கு அலுவலர்கள் – 06 பணியிடம்
- பாதுகாப்பாளர் – 02 பணியிடம்
- பன்முக உதவியாளர் – 01 பணியிடம்
OSC கல்வி தகுதி:
சென்னை OSC அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டம், முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
மைய நிர்வாகி :
சமூகப் பணியில் முதுகலை பட்டம் (Master’s Degree in Social Work / Psychology) பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் குறைந்தபட்சம் 4 வருட அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.
வழக்கு அலுவலர்கள் :
சமூகப் பணியில் இளங்கலை பட்டம் ((Bachelor’s Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.
பாதுகாப்பாளர் :
அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
பன்முக உதவியாளர் :
ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
OSC சம்பள விவரம்:
- மைய நிர்வாகி – ரூ.30,000/-
- வழக்கு அலுவலர்கள் – ரூ.15,000/-
- பாதுகாப்பாளர் – ரூ.10,000/-
- பன்முக உதவியாளர் – ரூ. 6,400/-
வயது வரம்பு:
சென்னை ஒன் ஸ்டாப் சென்டர் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகம், ஆட்சியர் வளாகம், 8வது தளம் சிங்காரவேலன் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-600001 என்ற முகவரிக்கு 27-அக்டோபர்-2022 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.