அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் வரி செலுத்தாவிடில் இணைப்பு துண்டிப்பு – அதிரடி உத்தரவு!!
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்தவில்லையெனில் இணைப்பு துண்டிக்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது.
குடிநீர் கட்டணம்
சென்னை மாநகராட்சியால் நிர்ணயிக்கப்படும் சொத்தின் ஆண்டு மதிப்பில் 7% சென்னை குடிநீர் வாரியத்தால் விதிக்கப்பட்டுள்ளது. இதனை ஒவ்வொரு அரையாண்டிற்கும் 3.5 % பிரித்து வசூலிக்கப்படுவது வழக்கமாகும். அதன்படி இந்த வரியை ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் தற்போது அறிவுறுத்தியுள்ளது.
தமிழக காவல்துறையின் “காவல் கரங்கள்” திட்டம் – “ஸ்காச் தங்க விருது” பெற்று சாதனை!
மேலும் இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளதாவது, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வீட்டின் உரிமையாளர்கள், குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற்றால் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உரிய காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு இல்லையெனில் குடிநீர் வரி/கழிவுநீர் வரியை உடனடியாக செலுத்த வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
இதனை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தத் தவறினால், வாரிய ஒழுங்குமுறை விதிகளின்படி குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரித்துள்ளது. இவ்வாறு இணைப்பு துண்டிக்கப்பட்டும் நீங்கள் வரி செலுத்தவில்லையெனில், நிலுவைதாரரின் அசையும் அல்லது அசையா சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலுவைத் தொகையை செலுத்த https://bnc.