சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2 – புதிய தண்டவாளங்கள் அமைக்க ரூ.163,31 கோடி ஒப்பந்தம்!
சென்னை மெட்ரோ ரயில் சேவையின் விரிவாக்கத்திற்காக புதிய வழித்தடங்களை அமைக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஜப்பான் நிறுவனத்திடம் ரூ.163,31 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில்
சென்னை மாநகரத்தின் போக்குவரத்துக்கு நெரிசலை குறைப்பதற்காக அதிவிரைவு பேருந்து சேவையான மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் சேவை சென்னை ஆலந்தூர் முதல் கோயம்பேடு பகுதிகளுக்கு இடையே இயக்கப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் சேவை மக்களிடம் வரவேற்புகளை பெற்று வரும் நிலையில், இந்த திட்டத்தின் 2 ஆம் கட்ட சேவைகளை துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் 340 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம் – முக்கிய அறிவிப்பு!!
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில், மெட்ரோ ரயில் திட்ட சேவை 2 இன் கீழ் சென்னை மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் மற்றும் சிஎம்பிடி வரை புதிய தண்டவாளங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ரூ.163,31 கோடிக்கு ஜப்பானின் M/s Mitsui & Co நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் கீழ், மெட்ரோ சேவையில் வழித்தடங்கள் 3 மற்றும் 5 இல் தண்டவாளங்கள் அமைக்கப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.