ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.880 அதிகரிப்பு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

0
ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.880 அதிகரிப்பு - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.880 அதிகரிப்பு - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.880 அதிகரிப்பு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் ஒரே நாளில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.880 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் வரலாறு காணாத விலை உயர்வால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை:

தமிழகத்தில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்வதும் குறைவதுமாய் இருந்து வருகிறது. கடந்த ஒரு மாதங்களாகவே தங்கத்தின் விலை ரூ.40 ஆயிரத்திற்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், நகைப்பிரியர்கள் தங்க நகைகளை வாங்குவதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் ஆபரணதங்கத்தின் விலை ரூ.5450 க்கும், ஒரு சவரன் ஆபரணதங்கத்தின் விலை ரூ.43600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. அதாவது, சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணதங்கத்தின் விலை ரூ.110 அதிகரித்து ரூ.5560க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.880 அதிகரித்து ரூ.44480க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.880 அதிகரித்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.74.40க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.74,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!