சென்னை கடற்கரைக்கு நீலக்கொடி தகுதி – முழு விவரம் இதோ !
இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை ஆன மெரினா முதல் கோவளம் வரை உள்ள கடற்கரைப் பகுதிகளுக்கு நீலக்கொடி தகுதியைப் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது பற்றிய முழு விவரங்களை கீழே காண்போம்.
நீலக்கொடி தகுதி:
51.3 கிமீ நீளத்தில் சென்னைக்கு வடக்கில் எண்ணூர் முதல் தெற்கு பகுதியில் கோவளம் வரை சென்னை கடற்கரை அமைந்துள்ளது. சென்னையில் சுற்றுலாவை மேம்படுத்தும் பொருட்டு, இப்பகுதிகளுக்கு நீலக்கொடி தகுதியை பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகள் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் பாதுகாப்புடனும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும் அமைக்கப்படுவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு Pre Board Exam.. தேர்வு தேதி வெளியீடு – அறிவிப்பை வெளியிட்ட ஹரியானா!
இந்தியாவில் இது வரை 10 நீலக் கொடி கடற்கரைகள் உள்ளன. இதில் தமிழகத்தை பொறுத்த வரை நீல கொடி தகுதியை ஏற்கெனவே கோவளம் கடற்கரை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் படி, முதல்கட்டமாக சென்னை மெரீனா முதல் கோவளம் கடற்கரை வரையில் 20 கடற்கரைகள் 31 கி.மீ. தொலைவில் மேம்படுத்தப்படவுள்ளது. இதற்காக ரூ.100 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு ஜூலை 25-2022 அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த சிறப்பு செயல்பாட்டு திட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசு சார்ந்த 22 துறைகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த திட்டம் மூலம் ஆங்காங்கு பிரிந்து காணப்படும் சென்னையில் உள்ள கடற்கரைகளை இணைப்பதால் தமிழ்நாட்டின் சுற்றுலா மேம்படும். இதனால் இந்த முயற்சியின் வெற்றியை தொடர்ந்து தமிழ்நாட்டின் மற்ற கடற்கரைகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.