சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரயில்கள் ரத்து
சென்னையில் மக்கள் பலர் மின்சார ரயில்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் சென்னை கோடம்பாக்கம் – தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (மார்ச் 3) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உங்கள் குழந்தைகளை சேர்க்க போறீங்களா? அப்ப உங்களுக்கான பதிவு இதோ!
மேலும் தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் 4வது வாரமாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால் ரயில்கள் ரத்து செய்யப்படுவது மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.