சன் டிவி “வானத்தைப் போல” சீரியலில் மீண்டும் மாற்றப்பட்ட கதாபாத்திரம் – ரசிகர்கள் அதிருப்தி!
தமிழில் முன்னணி தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “வானத்தைப் போல” சீரியலில் பல கதாபாத்திரங்கள் மாற்றப்படுவது தொடர் கதையாக இருந்து வரும் நிலையில் மூன்றாவது முறையாக பொன்னி கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளது. அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வானத்தைப் போல சீரியல்:
சன் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் தனி வரவேற்பு உண்டு அந்த வகையில் பல சீரியல்கள் TRPயில் போட்டி போடுகின்றனர். அண்ணன் தங்கை பாசம், அக்கா தம்பி பாசம் என கதை கொண்ட சீரியல்கள் என்றால் ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்ட சீரியல் தான் “வானத்தைப் போல” சீரியல். இந்த சீரியலில் அண்ணன் சின்ராசு கதாபாத்திரத்தில் நடிகர் தமன் குமார் நடித்து வந்தார்.
Exams Daily Mobile App Download
அதன் பின் அவர் சீரியலில் இருந்து விலகி அவருக்கு பதிலாக ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். அதன் பின் தங்கை கதாபாத்திரமும் மாற்றப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து கதாபாத்திரங்கள் சீரியலை விட்டு விலகுவது தொடர்கதையாக இருக்கிறது. அந்த வகையில் பொன்னி கதாபாத்திரம் ஏற்கனவே இரண்டு முறை மாற்றப்பட்ட நிலையில் மூன்றாவது முறை தற்போது மாற்றப்பட்டுள்ளது. முதலில் சங்கீதா என்பவர் நடித்து வந்த நிலையில் அவருக்கு பதிலாக ப்ரீத்தி குமார் பொன்னியாக நடித்து வந்தார்.
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30 கடைசி நாள்!
தற்போது மூன்றாவது முறையாக சாந்தினி பிரகாஷ் பொன்னி கதாபாத்திரத்தில் நடிக்க களமிறங்கி இருக்கிறார். இவர் இதற்கு முன்னதாக விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி, காற்றின் மொழி போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் அவர் பொன்னி கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த சீரியலில் தொடர்ந்து கதாபாத்திரங்கள் மாற்றப்படுவதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.