8 மாநிலங்களை சேர்ந்த ஆளுநர்கள் மாற்றம் – குடியரசு தலைவர் அறிவிப்பு!

0
8 மாநிலங்களை சேர்ந்த ஆளுநர்கள் மாற்றம் - குடியரசு தலைவர் அறிவிப்பு!
8 மாநிலங்களை சேர்ந்த ஆளுநர்கள் மாற்றம் - குடியரசு தலைவர் அறிவிப்பு!
8 மாநிலங்களை சேர்ந்த ஆளுநர்கள் மாற்றம் – குடியரசு தலைவர் அறிவிப்பு!

கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமனம் செய்ய உள்ளதாக குடியரசு தலைவர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புதிய ஆளுநர் நியமனம்:

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அரசியலமைப்பு தலைவர் ஆளுநர் ஆவார். ஆளுநர் தனது நிர்வாக அதிகாரத்தை நேரடியாகவோ அல்லது தனக்கு கீழ் உள்ள அலுவலர்களின் வாயிலாகவோ செயல்படுத்த முடியும். மாநிலத்தின் நிர்வாக துறை ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் படி மாநில அரசின் தலைவர் ஆளுநர் தான். ஆனால் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையே உண்மையான நிர்வாக அமைப்பாகும்.

தமிழகத்தில் 3.34 லட்சம் பேருக்கு திருமண உதவித்தொகை? அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!

இந்நிலையில் மாநிலத்தில் உள்ள ஆளுநரின் பதிவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இருந்த போதிலும் குடியரசு தலைவர் விரும்பும் வரை பதவியில் இருக்க முடியும். இந்நிலையில் தற்போது கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் ஏற்கனவே இருந்த ஆளுநர் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட உள்ளதாக குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அதன்படி கர்நாடக மாநில ஆளுநராக தாவர்சந்த் கெலாட், ஹரியானா ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா, மிசோரம் மாநில ஆளுநராக ஹரிபாபு, மத்திய பிரதேசம் மாநில ஆளுநராக மங்குபாய் சகன்பாய் படேல், ஹிமாச்சல் ஆளுநராக ராஜேந்திரன் விஸ்வநாத், கோவா ஆளுநராக ஸ்ரீதரன் பிள்ளை, திரிபுரா ஆளுநராக சத்யதேவ் நாராயன் ஆரியா, ஜார்க்கண்ட் ஆளுநராக ரமேஷ் பயஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!