இன்னும் இத்தனை நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

0
இன்னும் இத்தனை நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கு - வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
இன்னும் இத்தனை நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கு - வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
இன்னும் இத்தனை நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு (12.10.2022 முதல் 16.10.2022) பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாகவே பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி, குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி 12.10.2022 மற்றும்‌ 13.10.2022 ஆகிய தேதிகளில், தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, விருதுநகர்‌, மதுரை, கரூர்‌, ஈரோடு, நாமக்கல்‌, சேலம்‌, திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும்‌ திருப்பத்தூர்‌ ஆகிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு ஹாப்பி நியூஸ்.. கால அவகாசம் நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

மேலும் 14.10.2022 மற்றும் 15.10.2022 ஆகிய தேதிகளில், தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, சிவகங்கை, கரூர்‌, ஈரோடு, நாமக்கல்‌, சேலம்‌, திருச்‌சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, பெரம்பலூர்‌, அரியலூர்‌, கடலூர்‌, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர்‌, திருப்பத்தூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!