தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – CEO செயல்முறைகள் வெளியீடு!

0
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு - CEO செயல்முறைகள் வெளியீடு!
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு - CEO செயல்முறைகள் வெளியீடு!
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – CEO செயல்முறைகள் வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு சென்று சில பணிகளை மேற்கொள்ளும் படிக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர்களுக்கு பணி

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வழியாக இந்த கல்வியாண்டுக்கான பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே பள்ளிகளில் சில அலுவலக பணிகளை மேற்கொள்ளவதற்காக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டு, ஆசிரியர்களுக்கான சில செயல்முறைகளையும் வெளியிட்டுள்ளார். அதில், ஆசிரியர்கள் அனைவரும் EMIS இணையதளத்தில் மாணவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை சரி பார்த்து, புதிய மாணவர்களது பெயர் உள்ளிட்ட விவரங்களை சேர்க்க வேண்டும்.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் – ஆகஸ்ட் 2 முதல் துவக்கம்!!

இலவச நலத்திட்டங்கள் மாணவர்களிடம் சென்று சேருகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி மாணவர்கள் அனைவரையும் கல்வி தொலைக்காட்சி அட்டவணை வாயிலாக பாடங்களை கற்பிக்க வழிநடத்த வேண்டும். ஒருவேளை பாடங்களை தவற விட்ட மாணவர்களுக்கு யூடியூப் வழியாக கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை தயார் செய்து, அவற்றை வாட்ஸ் அப் குரூப் வழியாக அனுப்பி, தொடர் பயிற்சிகள் கொடுத்து மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும்.

வார இறுதியில், அனைத்து ஆசிரியர்களுக்கும் கூட்டம் நடத்தி அந்தந்த வாரத்தில் அவர்கள் மேற்கொண்ட பாடத் திட்டங்கள், கற்பித்தல் பணிகள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்து அதனை மேம்படுத்தும் பணிகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் அனைவரும் தினசரி கற்பித்தல், இணையவழி கற்றல் பணிகளை Work done பதிவேட்டில் பதிவு செய்து வார இறுதியில் பள்ளியின் தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ஆய்வக பயிற்சிகளை ntp மற்றும் diksha app மூலமாக கற்பிக்கும் பணிகளை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தல், பயிற்சி தொடர்பான பணிகளை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் பள்ளி சார்பான பணிகள் மற்றும் முன்னேற்றத்திற்கான பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டு இப்பணிகள் முறையாக செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!