தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டத்தில் ஆசிரியர் பணியிடத்தில் வேலைவாய்ப்பு – CEO வெளியிட்ட செயல்முறை!

0
தமிழகத்தில் 'இந்த' மாவட்டத்தில் ஆசிரியர் பணியிடத்தில் வேலைவாய்ப்பு - CEO வெளியிட்ட செயல்முறை!
தமிழகத்தில் 'இந்த' மாவட்டத்தில் ஆசிரியர் பணியிடத்தில் வேலைவாய்ப்பு - CEO வெளியிட்ட செயல்முறை!
தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டத்தில் ஆசிரியர் பணியிடத்தில் வேலைவாய்ப்பு – CEO வெளியிட்ட செயல்முறை!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். அந்த வகையில் இந்த மாவட்டத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தில் மாற்று ஆசிரியர் நியமிப்பதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகளை வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர் பணியிடம்

தமிழகத்தில் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வின் முதல் தாள் வருகிற செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாமல் உள்ளது.

இந்தியாவில் அக்.12 க்குள் 5G சேவைகள் அறிமுகம் – மத்திய அரசு தகவல்!

அதனால் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மொத்தமாக 15000 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் சேர்க்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. ஆதலால் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். மேலும் ஆசிரியர் தேர்வு செப்டம்பர் மாதம் தான் நடைபெற இருப்பதால் தற்போது காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான செயல்முறையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார். இதில் தெரிவித்துள்ளதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் மாணவர்களின் நலன் கருதி தற்காலிக முறையில் நிரப்பப்பட உள்ளது. அத்துடன் இந்த ஆசிரியர்கள் மறு உத்தரவு அல்லது முறையான ஆசிரியர் நியமிக்கப்படும் வரை பணியில் தொடரலாம் என்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!