இணைய வழி மோசடி புகார் எண் – மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் இணையத்தின் மூலம் ஏற்படும் பண மோசடிகளை தடுக்க தேசிய அளவிலான உதவி எண்ணை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இணைய மோசடி:
இந்தியாவில் இணைய பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. தற்போது கைகளில் உள்ள ஸ்மார்ட் போன்களின் மூலமாக எளிதாக மக்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இணையம் முலமாக பலரும் தொழில் செய்து வருகின்றனர். அதன் மூலம் வருவாயும் ஈட்டுகின்றனர். சமீப காலமாக இணையம் மூலம் பண மோசடிகள் நடப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றது. இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம், தங்களுக்கு கடன் பெற்று தருகிறோம் முன் பணம் செலுத்துங்கள், வேலை பெற்று தருகிறோம் பணம் செலுத்துங்கள் எனக்கூறி மக்களை தொடர்பு கொண்டு பேசி பணம் பறிக்கின்றனர்.
ஜியோ (Jio) வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு – ரூ.22க்கு அசத்தலான திட்டம்!!
இவ்வகையான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் சிலர் போலி நபர்களை நம்பி அதிக தொகையிலான பணத்தை இழந்துள்ளனர். இதை தடுக்க மத்திய அரசு கடந்த ஏப்ரல் 1-ந் தேதி ‘155260’ என்ற தேசிய உதவி எண்ணை அறிமுகப்படுத்தியது. மேலும் சைபர் மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பு I4C ஆல் உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இணைய மோசடி புகார் தளத்தையும் உருவாக்கியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த புகார் தளம் மற்றும் உதவி எண் ரிசர்வ் வங்கி முதல் அனைத்து வங்கிகளின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் 7 மாநிலங்களில் இந்த இணைய மோசடி புகார் எண், மற்றும் புகார் தளம் அமலில் உள்ளது. இதன் மூலம் இணையவழி பண மோசடிகள் தடுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டோர் உதவி எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிப்பதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு இழந்த பணத்தை திரும்ப பெறலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இந்த இணையவழி குற்றப்பிரிவு மையம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது