NEET PG தேர்வு 6 முதல் 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பு – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!
நீட் முதுநிலை படிப்புக்கான 2021 ஆம் ஆண்டிற்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. அதனால் இந்த ஆண்டு நடைபெற இருந்த நீட் முதுநிலைத் தேர்வை ஒத்தி வைப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு
இந்தியாவில் ஆண்டுதோறும் மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர தேசிய தேர்வு வாரியம் நீட் தேர்வை நடத்தி வருகிறது. அதன்படி 2022ம் ஆண்டுக்கான MD, MS படிப்புகளில் சேர மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வு மார்ச் 12ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்புகளுக்கு சேர விரும்பும் மாணவர்கள் NBEMS என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு ஊழியர்கள் கவனத்திற்கு!
அத்துடன் இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றுடன் (பிப்.4) கடைசி நாள் என்றும் தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது 2021-ஆம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இது கடந்த மே மாதம் நடைபெற வேண்டியது. ஆனால் அதிகரித்து வந்த கொரோனா பரவல் காரணமாக செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படும் என்று அறிவித்தது. இதனை தொடர்ந்து பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு பற்றிய தகவல்களை மத்திய அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
TNPSC குரூப் 2 தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இம்மாதம் தேர்வு தேதி அறிவிப்பு!
இதற்கு அதிக நாட்களை எடுத்துக் கொண்டால் செப்டம்பர் மாதத்திலும் நீட் தேர்வுக்கான கலந்தாய்வு நடத்த வாய்ப்பில்லை. அதனால் முதுநிலை நீட் தேர்வுக்கான கலந்தாய்வு உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது 2021 ம் ஆண்டுக்கான நீட் தேர்வின் கலந்தாய்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மார்ச் 12ம் தேதி நடைபெற இருந்த 2022ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வை 6-8 வாரங்களுக்கு ஒத்தி வைக்க உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதனால் தேர்வர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.