மத்திய அரசு ஓய்வூதியதரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. 50 லட்சம் டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் – வெளியான அப்டேட்!
இந்தியாவில் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 50 லட்சம் டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
அரசு இலக்கு
இந்தியாவில் உள்ள மத்திய அரசு ஓய்வூதியதரர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 50 லட்சம் டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்களை வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை, ஓய்வூதியம் பெறுவோர் நலச் சங்கங்கள் மற்றும் 16 வங்கிகளின் நோடல் அதிகாரிகளுடன் நாடு தழுவிய டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ் பிரச்சாரம் 2.0ஐ மதிப்பாய்வு செய்தது.
மேலும் இந்த கூட்டத்தில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறையின் செயலாளர் வி ஸ்ரீனிவாஸ், அனைத்து ஓய்வூதியதாரர்களும் டிஜிட்டல் லைஃப் சான்றிதழை சமர்ப்பிப்பதை உறுதிசெய்ய ஒரு செறிவூட்டல் அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்தினார். அது மட்டுமில்லாமல் 80 வயதுக்கு மேற்பட்ட உயர் மூத்த ஓய்வூதியதாரர்களின் DLC களுக்கு அதிக கவனம் செலுத்தும் அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். DLC பிரச்சாரம் 2.0 இன் கீழ், 1.29 கோடி ஓய்வூதியதாரர்கள் இதுவரை DLC களை சமர்ப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
CMRL ஆணையத்தில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!