PF என்னும் வருங்கால வைப்பு நிதிக்கான சம்பள வரம்பை உயர்த்த மத்திய அரசானது ஆலோசனை செய்து வருகிறது.
PF சம்பள வரம்பு உயர்வு:
EPFO நிறுவனத்தின் கணக்கில் ஊழியர்களின் வருங்கால தேவைக்காக சேமிக்கப்படும் சிறு தொகை வருங்கால வைப்பு நிதி (PF) என்றழைக்கப்படும். இவ்வாறு சேமிக்கப்படும் வைப்பு தொகையானது அவர்களது முதுமை காலத்தில் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த PF திட்டத்திற்கான ஊதிய வரம்பானது இதுவரை 15,000 ரூபாயாக உள்ளது. இந்த ஊதிய வரம்பானது 2014 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின் PF திட்டத்திற்கான ஊதிய வரம்பானது உயர்த்தப்படவில்லை. எனவே மத்திய அரசானது ஊதிய வரம்பை உயர்த்துவது குறித்து ஆலோசனை செய்து வருகிறது.
JEE 2024 தேர்வு தேதியில் மாற்றம்? தேர்தல் காரணமா? – மாணவர்கள் மத்தியில் குழப்பம்!
இவ்வாறு இது உயர்த்தப்பட்டால் ஊதிய வரம்பானது 21,000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ. 18000 முதல் ரூ. 25000 வரை உள்ளதே இந்த ஊதிய வரம்பு உயர்வு ஆலோசனைக்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த PF திட்ட ஊதிய வரம்பு உயர்வின் தாக்கம் EPF மற்றும் EPS-யின் பங்களிப்புகளை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.