மத்திய அரசு சார்பில் ‘வீட்டில் இருந்தே வேலை’ பார்க்கும் திட்டம் துவக்கம்? எச்சரிக்கை அறிவிப்பு!
இந்திய அரசு எந்தவிதமான தனியார் நிறுவனத்துடனும் இணைந்து வீட்டில் இருந்து வேலை பார்க்கும் திட்டத்தை தொடங்கவில்லை. அவ்வாறு சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் பொய்யானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் எச்சரிக்கை:
கடந்த 2020 முதல் கொரோனா தொற்றின் தாக்கம் நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இதனால் பலர் தங்களின் வேலைவாய்ப்பினை இழந்துள்ள நிலையில், பலருக்கும் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வசதி உள்ளது. பொதுவாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அக்டோபர் மாதம் முழு ஊரடங்கு? 3வது அலை எச்சரிக்கை!
சமீப காலமாக நாடு முழுவதும் போலியான அறிவிப்புகள் மற்றும் செய்திகள் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிவருகின்றது. இந்த செய்திகளை மக்கள் உண்மை என்று நம்பி ஏமாந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அரசு ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்புகளை உருவாகியுள்ளதாகவும், அது தொடர்பான பணியிடங்கள் உள்ளதாகவும் ஒரு செய்தி சமூக ஊடகத்தில் பரவி வந்தது.
TN Job “FB Group” Join Now
இந்த செய்தியினை குறித்து மத்திய அரசின் உண்மை கண்டறியும் சோதனை குழு பிஐபி ஆய்வுகளை நடத்தியது. ஆய்வுகளின் முடிவில், மத்திய அரசு இது போன்ற எந்த அறிவிப்பையும் வழங்கவில்லை என்று கூறியுள்ளது. இந்த மோசடி இணைப்புகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் அந்தந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ அல்லது நிறுவனங்களின் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடக கணக்குகள் மூலமாகவோ செய்யப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.