இழந்த வகுப்பு நேரத்தை ஈடுசெய்ய பாடத்திட்டங்கள் திருத்தம் !!

0
இழந்த வகுப்பு நேரத்தை ஈடுசெய்ய பாடத்திட்டங்கள் திருத்தம்
இழந்த வகுப்பு நேரத்தை ஈடுசெய்ய பாடத்திட்டங்கள் திருத்தம்

இழந்த வகுப்பு நேரத்தை ஈடுசெய்ய பாடத்திட்டங்கள் திருத்தம் !!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது.

இதனால் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு, பொதுத்தேர்வு, செமஸ்டர் தேர்வு என அனைத்தும் தள்ளிவைக்கப்படும், ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் அறிவிப்புகள் வெளியாகியது.தற்போது ஊரடங்கானது படிப்படியாக தளர்த்தப்படுவதால் மாணவர்களுக்கான தேர்வானது நடத்தப்பட ஏற்பாடுகள் நடைபெற தொடங்கி விட்டது.

தற்போது சி.பி.எஸ்.இ தரப்பிலிருந்து ஒரு புதிய அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதில் ஊரடங்கால் ஏற்பட்ட வகுப்பு நேர இழப்பை ஈடுசெய்ய பாடத்திட்டத்தை திருத்தியமைக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சி.பி.எஸ்.இ வாரியத் தலைவர், “நாங்கள் பாடத்திட்டத்தை திருத்தியமைக்க இருக்கிறோம். பாடத்திட்டத்தில் இருக்கும் அவசியமான முக்கிய கூறுகளைத் தக்க வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். ஒரு மாத காலத்திற்குள் பாடத் திட்டங்களை இறுதி செய்ய முடியும்” என அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

முன்னதாகவே தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் – என்சிஇஆர்டி சேர்ந்து மாற்றுக் கல்வி அட்டவணையினை வெளியிட்டு இருந்தது. தற்போது பாட திட்டம் குறைப்பு பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே மாணவர்களுக்கு பாடத்திடம் குறைவதனால் தேர்வு கால அட்டவணையும் மாற்றம் பெறும்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!