Net Banking செய்பவரா? குறிவைக்கும் மோசடி தாரர்கள்.. கவனிக்காவிட்டால் பணம் போய் விடும் – டிஜிபி அறிவுரை!
தமிழகத்தில் நெட் பேங்கிங் மூலம் பண மோசடிகள் அதிகரித்து வருகிறது. மர்ம கும்பல் வாடிக்கையாளர்களின் விவரங்களை நூதன முறையில் கைப்பற்றி வங்கி கணக்கில் உள்ள பணத்தை சூறையாடி விடுகின்றனர். இது குறித்து தற்போது தமிழக டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.
நெட் பேங்கிங்:
நாடு முழுவதும் மக்கள் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் மூலமாகவும், பண பரிமாற்ற செயலிகள் வாயிலாகவும் பணத்தை அனுப்புகின்றனர், மற்றவர்களிடம் இருந்தும் பணத்தை பெறுகின்றனர். அதனால் தற்போது வங்கிகளுக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை என்ற நிலை வந்து விட்டது. இவ்வாறு பண பரிமாற்றம் செய்து வரும் நேரத்தில் சில மோசடிகளும் அரங்கேறி வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இதனால் வாடிக்கையாளர்கள் சில நேரங்களில் தங்களின் பணத்தை இழக்க நேரிடுகிறது. அதாவது மோசடியில் ஈடுபடும் கும்பல் வங்கி வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு வங்கி ஊழியர்களை போல பேசி கணக்கு சார்ந்த முழு விவரங்களையும் சேகரிக்கின்றனர். மேலும் ஆதார் புதுப்பிப்பு, வங்கி கணக்கு புதுப்பிப்பு என்ற பெயரில் குறுஞ்செய்திகள் வாயிலாக லிங்குகளை அனுப்பி அதனை கிளிக் செய்ய வைக்கிறார்கள்.
மாநிலம் முழுவதும் நவம்பர் 28 விடுமுறை – அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இதனை கிளிக் செய்யும் போது உங்களின் தனிப்பட்ட விவரங்கள் ஹேக்கர்களுக்கு சென்று விடும். இதன் மூலம் பணம் திருடு போக கூடும். இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் வேளையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நெட் பேங்கிங் மோசடி குறித்து பேசியுள்ளார். மேலும் நாட்டில் புதிய நெட் பேங்கிங் மோசடிகள் நடந்து வருகிறது. அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். OTP, Pan Card போன்ற விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.