ஸ்பா மையங்களில் கட்டுப்பாடு விதிப்பது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அது குறித்து புதிய உத்தரவு வெளியாகி இருக்கிறது.
நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உள்ள ஸ்பா மையங்களில் சில முறைகேடுகள் அவ்வப்போது நடந்து வருகிறது. இதனை தடுக்க அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இருந்தாலும் குற்றம் குறைந்தபாடில்லை. இந்நிலையில் ஸ்பா மையங்களில் குற்றங்களை தடுக்க ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண் மசாஜ் செய்யலாம் என பொதுநல வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இனி ATM மெஷினில் பணம் அனுப்ப புதிய அம்சம் அறிமுகம் – RBI ன் சூப்பர் ஏற்பாடு!
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அதில் ஸ்பா மையங்களில் ஆணுக்கு ஆண் பெண்ணுக்கு பெண் மசாஜ் செய்ய உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் அரசின் சட்டத்தின் கீழ் மசாஜ் மையம், அழகு நிலையங்கள், ஸ்பா ஆகியவை வணிக உரிமம் பெற வேண்டிய தொழில்கள் பட்டியலில் 6வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.