தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருள் வாங்காத கார்டுகள் ரத்து? உணவுப்பொருள் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவிப்பு !
தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தில் ரேஷன் அட்டைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில் ரேஷன் கடைகளில் 3 மாதங்கள் தொடர்ந்து பொருள் வாங்கவில்லை என்றால் உங்களது கார்டு ரத்து செய்யப்படுவது குறித்து உணவுப்பொருள் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரேஷன் கடைகள்:
தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் கீழ் ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருள்களை ரேஷன் கடைகள் வழங்கி வருகின்றன. மேலும் அரசின் பல நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களிடம் சென்றடைகின்றனர். மேலும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
அந்த வகையில் தரமான பொருள்கள் வழங்குவதை அரசு உறுதி செய்து வருகிறது. மேலும் நலத்திட்ட உதவிகளும் தேவையான மக்களுக்கு சரியான முறையில் சென்றடைகிறதா என அடிக்கடி அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில ரேஷன் கடைகளில் மூன்று மாதங்களாக 13 லட்சம் குடும்ப அட்டைகள் ரேஷன் பொருட்களை வாங்க தவறியிருப்பதாக அரசு நடத்திய ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ரேஷன் பொருட்கள் அதிக விலைக்கு விற்கும் அவலம் ஏற்படுகிறது.
அறிவியல் ரீதியாக இந்தியா முன்னேறியுள்ளதாக மோடி பெருமிதம் – அறிவிப்பு வெளியீடு!
Exams Daily Mobile App Download
அதனை சரி செய்யும் நோக்கில் கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்களை வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளை கணக்கெடுக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இது குறித்து ரேஷன் பொருட்களை வாங்காத குடும்பங்களுக்கு மதுரை மாவட்ட வழங்கல் அலுவலர்கள் தொடர்புகொண்டு கேள்வி எழுப்பினர்கள். மேலும் அதில் அவர்கள் தெரிவித்த தகவல்கள் உணவுப்பொருள் நுகர்வோர் ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் அதனால் குடும்ப அட்டைகள் தகுதி நீக்கம் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்