அறிவியல் ரீதியாக இந்தியா முன்னேறியுள்ளதாக மோடி பெருமிதம் – அறிவிப்பு வெளியீடு!
நாளுக்கு நாள் இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நல்ல முன்னேற்றத்தை கண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்துவரும் விஞ்ஞானிகளை குடிமக்கள் கொண்டாட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
அறிவியல் வளர்ச்சி:
மத்திய, மாநில அரசு அறிவியல் மாநாட்டை இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சியின் மூலமாக இன்று தொடங்கி வைத்துள்ளார். அந்த மாநாட்டில் மோடி இந்தியாவின் அறிவியல் மற்றும் அறிவியல் துறையில் தொடர்புடையவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது எனவும் அறிவித்துள்ளார். மேலும், இந்தியா நான்காவது தொழில் புரட்சியை நோக்கி முன்னேறி வருவதாகவும், நாட்டின் வளர்ச்சியை விரிவுபடுத்துதல் அறிவு மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகமாக இருக்கிறது எனவும் இந்த மாநாட்டில் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமைந்து வரும் அறிவியல் விஞ்ஞானிகளின் சாதனைகளை பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இருபத்தியோராம் நூற்றாண்டின் புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கு அறிவியல் தான் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதனால், விஞ்ஞானிகளின் சாதனையை பொதுமக்கள் கொண்டாடும்போது விஞ்ஞானிகளுக்கு நல்ல ஊக்கத்தை கொடுக்கும் எனவும் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் செப்.12 ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
மேலும் இந்தியா அறிவியல் அடிப்படையில் நல்ல தொலைநோக்குப் பார்வையுடன் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்து வருகிறது எனவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்தில் கூறியுள்ளார். மேலும், கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்தே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முதலீடு கணிசமான அளவு அதிகரித்து உள்ளதாக அறிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டில் இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் 81வது இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 46 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்