இன்று முதல் ஊரடங்கு உத்தரவு ரத்து – விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு!
கொரோனா 2ம் அலை தடுப்பு கட்டுப்பாடுகளாக இதுவரை அமலில் இருந்து வந்த இரவு ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்படுவதாக கர்நாடகா மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது தவிர விமான பயணிகளுக்கும் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீக்கம்
கர்நாடகாவில் கடந்த ஏப்ரல் மாதம் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளான இரவு ஊரடங்கு உத்தரவை நீக்குவதாக அம்மாநில அரசு நேற்று (நவ.5) உத்தரவிட்டுள்ளது. அதாவது கர்நாடகா மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று வழக்குகள் மற்றும் பாசிட்டிவிட்டி விகிதம் குறைவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில தலைமை செயலாளரும், மாநில செயற்குழு தலைவருமான பி.ரவிகுமார் பிறப்பித்த உத்தரவில், ‘கர்நாடகா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு சட்டம் வாபஸ் பெறுவதற்கான முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
நவ.8 முதல் 1 – 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | மதிய உணவு & இலவச பேருந்து வசதி!
அதனால் தினசரி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் இரவு ஊரடங்கு சட்டம் இத்துடன் திரும்ப பெறப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர, அனைத்து கொரோனா தடுப்பு பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் இணங்க குதிரை பந்தயத்தை மீண்டும் தொடங்க அரசாங்கம் அனுமதித்துள்ளது. அந்த வகையில் குதிரை பந்தயத்தில் கலந்துகொள்ளும் பந்தயப் புரவலர்களின் எண்ணிக்கை இடத்தின் இருக்கை திறனுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்றும் முழுமையாக தடுப்பூசி எடுத்துள்ளவர்கள் மட்டுமே வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் – யூடுப் சேனல் வீடியோ!
இதனுடன் மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களிலும் அரசாங்கம் சில கூடுதல் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அந்த வகையில் பயணிகள் இனி விமான நிலையங்களில் SPO2 வழக்கமான சோதனைகள் அதாவது காய்ச்சல், இருமல், சளி, சுவாசிப்பதில் சிரமம் போன்றவை தவிர மற்ற சோதனைகளுக்கு உட்படுத்தப்படத்தேவையில்லை. இது தவிர, விமான நிலையத்தில் நடத்தப்படும் இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளை தவிர RT-PCR சோதனை அறிக்கையை சரிபார்ப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது.
தவிர ஒவ்வொரு நாளும் மாநிலத்தில் 1,10,000 சோதனைகளை நடத்தவும், இவற்றில் 50,000 சோதனைகள் பெங்களூருவிலும், 60,000 சோதனைகள் மற்ற மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா தலைநகரில் கொரோனா தொடர்பான பரிசோதனைகளை 20% அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சளி, இருமல் மற்றும் சுவாசப் பிரச்சனைகளுக்கு மருந்து வாங்குபவர்களின் தொடர்பு எண்களை சேகரிப்பது குறித்த வழிகாட்டுதல்களை வெளியிடுவது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.