![பள்ளிளுக்கு முக்கிய அறிவிப்பு.. குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அதிரடி உத்தரவு - கேரள மாநிலம் அமல்! பள்ளிளுக்கு முக்கிய அறிவிப்பு.. குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அதிரடி உத்தரவு - கேரள மாநிலம் அமல்!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/01/பள்ளிளுக்கு-முக்கிய-அறிவிப்பு.jpg)
பள்ளிளுக்கு முக்கிய அறிவிப்பு.. குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அதிரடி உத்தரவு – கேரள மாநிலம் அமல்!
ஆசிரியர்களை சார், மேடம் என அழைப்பதில் பாலின பாகுபாடு இருப்பதாக புகார்கள் வந்தது. இது குறித்து கேரள மாநில பள்ளிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தற்போது முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
டீச்சர்:
கேரள மாநில கல்வி நிலையத்தில் மாணவர்கள் ஆசிரியர்களை சார், மேடம் என அழைத்து வருகின்றனர். இவ்வாறு அழைக்கும் போது பாலின வேறுபாடு காட்டப்படுவதாக புகார்கள் எழுந்தது. இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் ஆய்வு மேற்கொண்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் ஓசூரில் வர்த்தக மையம் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் உறுதி!!
Follow our Instagram for more Latest Updates
அதாவது இனி பள்ளிகளில் ஆசிரியர்களை சார் என்றும் மேடம் என்றும் அழைக்க கூடாது. கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்களிடம் பாலின பாகுபாடு காட்டாமல் மாணவர்கள் அவர்களை டீச்சர் என அழைப்பது தான் மிகவும் பொருத்தமானது என்று ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.
அதனால் இனி மாணவர்கள் ஆசிரியர்களை டீச்சர் என்றே அழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உரிய உத்தரவை அனுப்புமாறு பள்ளிக்கல்வித் துறைக்கு குழந்தைகள் ஆணையம் ஆணையிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பள்ளிகளில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து 2 மாதங்களுக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.