தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை அவகாசம் வழங்கல் – வணிக நிறுவனங்களுக்கு சலுகை!

0
தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை அவகாசம் வழங்கல் - வணிக நிறுவனங்களுக்கு சலுகை!
தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை அவகாசம் வழங்கல் - வணிக நிறுவனங்களுக்கு சலுகை!
தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை அவகாசம் வழங்கல் – வணிக நிறுவனங்களுக்கு சலுகை!

தமிழகத்தில் பல்வேறு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் முத்திரையிடாத எடையளவுகளை வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் மறு முத்திரையிட்டு கொள்ளலாம் என தொழிலாளர் ஆணையர் மா.வள்ளலார் தெரிவித்துள்ளார்.

மறு முத்திரை கால அவகாசம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல வணிக நிறுவனங்களில் முத்திரையிடப்பட வேண்டிய எடைகள், அளவைகள், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்கல் தராசுகள் உள்ளிட்ட எடையளவு கருவிகளுக்கு, உரிய காலத்தில் மறுமுத்திரையிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தொழிலாளர் ஆணையர் மா.வள்ளலார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜூலை 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு? ஆன்லைன் வகுப்புகள்!

அதில், வணிக நிறுவங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் எடைகள், அளவைகள், தராசுகள், எலெக்ட்ரானிக் தராசுகள், எடைப் பாலங்கள், பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் பம்புகள், எரிபொருட்கள் கொண்டு செல்லும் லாரிகள் மற்றும் இதர எடையளவுக் கருவிகளை ஊரடங்கு காரணமாக மறுமுத்திரையிட இயலவில்லை என்று தொழில் நிறுவனங்கள், சங்கங்கள் தெரிவித்துள்ளன.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை காலாண்டில் மறுபரிசீலனை செய்து முத்திரையிடாத எடையளவுகளை, அந்தந்த பகுதியில் உள்ள சட்டமுறை எடையளவு ஆய்வாளர்கள் மற்றும் சட்டமுறை எடையளவு உதவிக் கட்டுப்பாட்டு அலுவலர்களிடம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கூடுதல் கட்டணமின்றி மறு முத்திரையிட்டுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!