இந்தியாவில் பற்றி எரியும் அக்னிபாத் எதிர்ப்பு போராட்டம் – இன்று மாலை பிரஸ் மீட்! செயலாளர் விளக்கம்!

0
இந்தியாவில் பற்றி எரியும் அக்னிபாத் எதிர்ப்பு போராட்டம் - இன்று மாலை பிரஸ் மீட்! செயலாளர் விளக்கம்!
இந்தியாவில் பற்றி எரியும் அக்னிபாத் எதிர்ப்பு போராட்டம் - இன்று மாலை பிரஸ் மீட்! செயலாளர் விளக்கம்!
இந்தியாவில் பற்றி எரியும் அக்னிபாத் எதிர்ப்பு போராட்டம் – இன்று மாலை பிரஸ் மீட்! செயலாளர் விளக்கம்!

தற்போது அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில் ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர், அனைத்து சேவைத் தலைவர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் விளக்கம் அளிக்கும் வகையில் இன்று (ஜூன் 21) செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.

அக்னிபாத் திட்டம்

நாடு முழுவதும் தற்சமயம் பெரிய அளவிலான வன்முறை மற்றும் போராட்டத்திற்கு வழி வகுத்துள்ள அக்னிபாத் திட்டம் குறித்த விளக்கங்களை ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் தலைமையில் முப்படையினர் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த ஜூன் 14ம் தேதி ராணுவ ஆட்சேர்ப்புக்காக அறிவிக்கப்பட்ட அக்னிபாத் திட்டம் இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் என்ற கருத்துக்களுக்கு மத்தியில் இத்திட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் அக்னிபாத் திட்டம் தொடர்பான சில விவரங்களை அனைத்து சேவைத் தலைவர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் தெரிவிக்கும் வகையில் ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் இன்று மாலை 3 மணிளவில் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார். இதற்கிடையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வெடித்த வன்முறைப் போராட்டம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிடக் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Hero Motocorp நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் இதோ..!

அந்த வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.டி ரவிக்குமார் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால பெஞ்ச், மனுதாரர் மற்றும் வழக்கறிஞருமான விஷால் திவாரியின் மனுவை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது தொடர்பாக எஸ்ஐடி விசாரணை கோரிய மனு குறித்து தலைமை நீதிபதி முடிவெடுத்த பிறகு இது குறித்த விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!