புதிதாக ‘இதற்காக’ தனித்துறை உருவாக்கப்படும் – முதல்வரின் சூப்பரான அறிவிப்பு!

0
புதிதாக 'இதற்காக' தனித்துறை உருவாக்கப்படும் - முதல்வரின் சூப்பரான அறிவிப்பு!
புதிதாக 'இதற்காக' தனித்துறை உருவாக்கப்படும் - முதல்வரின் சூப்பரான அறிவிப்பு!
புதிதாக ‘இதற்காக’ தனித்துறை உருவாக்கப்படும் – முதல்வரின் சூப்பரான அறிவிப்பு!

புதுச்சேரியில் 2023-24 ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இளைஞர் & விளையாட்டுக்காக தனித்துறை உருவாக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்

புதுச்சேரியில் 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி அன்று தொடங்கியது. இதைத் தொடர்ந்து, கடந்த 13ம் தேதி அன்று நடப்பு நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி அவர்கள் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில், இதில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 வீதம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி வருடத்திற்கு 12 சிலிண்டருக்கு என மொத்தமாக ரூ. 3600 வரை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதன் மூலமாக அரசுக்கு ரூ.126 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுத்தேர்விற்கு தாமாதமாக வரும் மாணவர்களுக்கு விதிகளில் தளர்வு – பள்ளிக்கல்வித்துறையிடம் கோரிக்கை!

இதையடுத்து தற்போது துறை வாரியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்காக என தனித்துறை உருவாக்கப்படும் என முதல்வர் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார். மேலும் இதற்காக ரூ.530 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!