நாடு முழுவதும் லட்சக்கணக்கான டவர்களில் BSNL 5ஜி சேவை – வெளியான சூப்பரான தகவல்!!
இந்தியா முழுவதும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை அறிமுகம் செய்து வருகின்றனர். இதையடுத்து தற்போது அரசு நிறுவனமான BSNL நிறுவனமும் நாடு முழுவதும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
BSNL நிறுவனம்:
நாட்டில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான Jio, Vodafone idea, மற்றும் Airtel உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் அரசு பொதுத்துறை நிறுவனமான BSNL நிறுவனமும் 5 ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிறுவனம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சியால் தற்போது மிகவும் பின்தங்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் முன்னணி நிறுவனமாக வளர நாடு முழுவதும் லட்சக்கணக்கான டவர்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, இந்தியா முழுவதும் இன்னும் 6 மாத காலத்திற்குள் சுமார் 1.35 லட்சம் டவர்கள் மூலமாக ரூ.4 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்து 5ஜி சேவையை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலநிலை மாற்ற இயக்கம் அமைப்பு – முதல்வர் துவக்கி வைப்பு!
Follow our Instagram for more Latest Updates
மேலும் இதற்காக TCS நிறுவனத்திடம் 5G தொழில்நுட்பத்தை கேட்டுள்ளதாகவும் இதே போல், ரூ. 3000 முதல் ரூ. 4000 கோடி வரை அரசிடம் நிதி கேட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி 6 மாத காலத்திற்குள் BSNL நிறுவனத்தின் 5ஜி சேவை அறிமுகமானால் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.