தமிழகத்தில் காலநிலை மாற்ற இயக்கம் அமைப்பு – முதல்வர் துவக்கி வைப்பு!
தமிழகத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காலநிலை மாற்ற இயக்கத்தை இன்று முதல்வர் தொடங்கி வைத்தார். காலநிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த இயக்கம் ஆராயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம்:
தமிழகத்தில் எப்போதும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்க்கும். தற்போது மாண்டாஸ் புயல் வேறு வேகமெடுத்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்த புயலால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் காலநிலை மாற்ற இயக்கத்தை தொடங்கி வைக்கவுள்ளார். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து தடுக்கும் வகையிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் காலநிலை மாற்றத்தை தடுக்க இயற்கை முறையிலான பயோஷீல்ட் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களுக்கு உள்ளே உணவு கடைகள் அமைப்பு – தெற்கு ரயில்வே முடிவு!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மாவட்டம் தோறும் காலநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும் என்றும் இந்த இயக்கத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைவராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மாநில அளவிலான இயக்கத்திற்கு முதல்வர் தலைவராக இருப்பார்.