இந்தியர்கள் உள்நுழைய அனுமதி இல்லை – பிரிட்டன் அரசு அறிவிப்பு!!

0
இந்தியர்கள் உள்நுழைய அனுமதி இல்லை - பிரிட்டன் அரசு அறிவிப்பு!!
இந்தியர்கள் உள்நுழைய அனுமதி இல்லை - பிரிட்டன் அரசு அறிவிப்பு!!
இந்தியர்கள் உள்நுழைய அனுமதி இல்லை – பிரிட்டன் அரசு அறிவிப்பு!!

கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பிரிட்டன் அரசு இந்தியாவை ரெட் லிஸ்ட் பட்டியலில் சேர்ப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து பிரிட்டன் வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

ரெட் லிஸ்ட் பட்டியல்:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காட்டு தீ போல பரவி வருகிறது. இதனை தடுக்க அரசும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனாவால் 2 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இந்தியாவில் இருந்து பிரிட்டன் வருபவர்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளை ரெட் லிஸ்ட் பகுதியில் சேர்த்துள்ள பிரிட்டன் தற்போது இந்தியாவையும் சேர்க்க திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இது குறித்து பிரிட்டன் சுகாதாரத்துறை கூறுகையில், வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பிரிட்டன் வர அனுமதி இல்லை எனவும், தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த வாரம் இந்தியாவிற்கு வருவதாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக இந்த வருகை ரத்து செய்யப்பட்டது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!!

பிரிட்டன் உள்பட்ட பல நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உலக நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பரவலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அரசும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமடைந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!