தமிழக பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் – முக்கிய அறிவிப்பு இதோ!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் - முக்கிய அறிவிப்பு இதோ!
தமிழக பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் - முக்கிய அறிவிப்பு இதோ!
தமிழக பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் – முக்கிய அறிவிப்பு இதோ!

தமிழகத்தில் அரசு தொடக்க பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து இத்திட்டத்திற்காக எஸ்.எம்.சி உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

காலை சிற்றுண்டி

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி நடப்பு ஆண்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை 8.30 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் இத்திட்டம் முறையாக செயற்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் பள்ளி மேலாண்மை குழுக்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – Whatsapp மூலமான சேவையை தொடரும் வழிமுறைகள்!

இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து பள்ளி நாட்களில் நடத்தப்பட வேண்டும். இதையடுத்து எஸ்.எம்.சி. உறுப்பினர்கள் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், காய்கறிகள், உணவுப் பொருட்கள், குடிநீர் உள்ளிட்டவை சுத்தமானதாக பயன்படுத்தப்படுகின்றனவா என்று கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் உணவு பொருளின் தரம், சுவை ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து, மாணவர்கள் தங்களின் தட்டு மற்றும் கைகளை சுத்தமாக கழுவுகிறார்களா? என்று கண்காணிக்கப்பட வேண்டும். அத்துடன் மாணவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தூய்மையானதாக உள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும். மேலும் எஸ்.எம்.சி. உறுப்பினர்கள் மாணவர்களுக்கு உணவு பரிமாறும் போது உதவி செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகள் எஸ்.எம்.சி. உறுப்பினர்கள் சுழற்சி முறையில் மேற்பார்வையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!