சென்னையில் இருந்து வரும் தனியார் பள்ளிகளுக்கு வந்த மிரட்டலை தொடர்ந்து குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் உடனடியாக விடுமுறை அறிவித்து பள்ளி உத்தரவிட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
தமிழக பள்ளிகளில் தேர்வு நடைபெறும் நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கு திட்டமிட்டு பள்ளிகளுக்கு வெடிகுண்டு இருப்பதாக போன் கால் அல்லது கடிதம் மூலமாக மிரட்டல்கள் வருவது தொடர்கதையாகியுள்ளது. இது போன்ற தகவல்கள் வெறும் புரளிகளாக இருக்கும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிர் பற்றிய விஷயம் என்பதால் இது குறித்து உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இன்று சென்னையில் உள்ள ஐந்து தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
Air India நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தயாராகுங்கள்!
ஒரே ஐபி முகவரியில் இருந்து மட்டுமே குறிப்பிட்ட மின்னஞ்சல் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோபாலபுரம், ஜே ஜே நகர், ஆர்.ஏ புரம், அண்ணா நகர் மற்றும் பாரிமுனை ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் கிடைத்தவுடன் பெற்றோருக்கு எஸ் எம் எஸ், WhatsApp மற்றும் போன் கால் மூலமாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு குழந்தைகளை அழைத்துச் செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் குறிப்பிட்ட பள்ளிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு உள்ளனர்.