இந்த வாரம் பொழியும் ரத்த மழை – வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை! காரணம் என்ன?
இங்கிலாந்து நாட்டில் இந்த வாரம் ரத்த மழை என்னும் அதிசய நிகழ்வு ஒன்று நடைபெற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ரத்த மழை என்பது அதிக அளவிலான சிவப்பு நிற தூசு மழை நீருடன் கலக்கும் போது உருவாகிறது கவனிக்கத்தக்கது.
ரத்த மழை
தற்போது தென்கிழக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் கடும் இடியுடன் கூடிய மழை பெய்து வரும் வேளையில் இந்த வாரத்தில் இரத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ரத்த மழை என்பது அதிக அளவிலான சிவப்பு நிற தூசு மழை நீருடன் கலக்கும் போது உருவாகிறது. இப்போது, இங்கிலாந்தின் ஒரு சில பகுதிகளில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இப்போது சிவப்பு நிறத்திலான தூசி மேகங்கள் இங்கிலாந்தில் விசித்திரமான வானிலை விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் லண்டனில் முற்றிலும் அறிமுகமில்லாத மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்கள் வானத்தில் தோன்றி இருக்கிறது. இதற்கிடையில், இந்த இரத்தம் போன்ற சிவப்பு மழை ஆபத்தானதாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இப்போது, தூசியின் அளவு குறைவாக இருப்பதாகவும், அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது போன்ற நிகழ்வு இந்தியாவிலும் நடைபெற்றிருக்கிறது. அதாவது, கடந்த 2001 ஆம் ஆண்டில் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இந்த சிவப்பு மழை பெய்தது. அந்த மழை மக்களின் ஆடைகளை கறைப்படுத்தும் அளவுக்கு வலிமையானதாக இருந்ததாம். இந்த இரத்த மழை ஆபத்தானதாகத் தோன்றினாலும், இந்த நிகழ்வுக்குப் பின்னால் ஒரு அறிவியல் விளக்கம் உள்ளது. அதாவது, ட்ரென்டெபோலியா அனுலாட்டா எனப்படும் நிலப்பரப்பு ஆல்காவிலிருந்து காற்றில் பரவும் உத்திகளால் கேரளாவில் சிவப்பு மழை பெய்ததாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.